செப்டம்பர்,04- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அவைகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ( செவ்வாய்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 8 மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலுக்கான பரிசோதனைக்களமாக அமைந்துள்ளது. திரிபுராவில் இருContinue Reading

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading

ஏப்ரல் 17 கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெகதீஷ் ஷெட்டர் எந்தContinue Reading

Fri, 14 Apr 2023 அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று சொல்லி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. முன்னாள் முதல்வர் லட்சுமண் சவதி விலகல் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் 224 தொகுதிகளில் 189 தொகுதிகளில் போட்டியிட பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில்Continue Reading

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறகிறது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வேட்பு மனுக்களைContinue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் பாஜக தேர்தல் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர்Continue Reading

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டுContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16-ம் ஞாயிற்றுக்கிழமை பகல்Continue Reading

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்Continue Reading

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. இந்நிலையில்Continue Reading