தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆதனின் பொம்மை” என்ற நாவல் எழுதியதற்காக உதயசங்கருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960-ம் ஆண்டு பிறந்தவர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.Continue Reading