ஜூலை, 11- செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்Continue Reading

ஜுலை, 10- கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானதாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரகும். இந்த புகார்களுக்கு நடுவே அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் கடந்த மாத தொடக்கத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கரூரில் அவருடைய தம்பி அசோக் குமார்Continue Reading

ஜுலை,07- அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அறப்போர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில்Continue Reading

அதிமுக ஆட்சியில் அமைச்சதாக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜூலை 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குContinue Reading

ஜுன், 29- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆறு நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு காலையில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. இந்திய பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இங்கிலாந்து முழுவதுமே பிரதமர் மோடியின் ஆட்சியில்அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படிContinue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதியைத் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை  காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே கால கட்டத்தில் அவரிடம் மருத்துவனையில் வைத்து 8Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது.  அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்புContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றிய உத்தரவுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி அமலாக்க துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். மேல் முறையீட்டு மனுக்கள்Continue Reading