கோவையில் தனியார் பேருந்தின் பெண் ஓட்டுநர் சர்மிளா வேலையில் இருந்து விலகியது பெரிய செய்தியாகி உள்ளது. அவருக்கு உதவுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த 24 வயது சர்மிளா, வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழ் நாட்டில் தனியார் பேருந்தின் முதல் பெண் டிரைவர் என்பதால் சர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.Continue Reading