ஆன்மீக பயணம் முடிந்த பிறகு அடுத்த படம் – ரஜினியின் திட்டம்.

ஆகஸ்டு,10-

நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். உடல்நலக்குறைவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் இமயமலை செல்லவில்லை.

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அவர் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார்.

அங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார். முன்னதாக போயஸ்கார்டன் இல்லத்தில் நிருபர்களிடம் அவர் சிறிது நேரம் பேசினார்.

’‘நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்கிறேன்.கொரோனா சமயம் என்பதால் அங்கு போக முடியவில்லை.நான் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை ( இன்று) தியேட்டர்களில் ரிலீஸாகிறது. படத்தை பார்த்துவிட்டு,

உங்களின் கருத்துகளை கூறுங்கள்’’என்று சொல்லி விட்டுகாரில் கிளம்பினார்.

இமயமலையில் ரஜினிகாந்த் ஒரு வாரம் தங்கி இருப்பார். தனது ஆன்மிக குரு பாபாஜி குகைக்கு சென்று வழிபட திட்டமிட்டுள்ளார். இதன்பின் ரிஷிகேஷ், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும்

செல்கிறார்.  பயணத்தை  முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பிறகு அடுத்தப் படத்திற்கு தயாராவது திட்டமாகும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *