*மராட்டியத்தில் சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை உடைத்தார்- 36 எம்.எல்.ஏ.க்கள் உடன் பராதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்தவருக்கு உடனடியாக துணை முதல்வர் பதவி.

* நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார் முயல்வதால் அஜித் பவார் மூலம் அதிர்ச்சி வைத்தியம்- பா.ஜ.க.மீது பல்வேறு தரப்பினரும் புகார்.

* சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றை வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை- அழுகிய வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்.

* காலி மது பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுவதால் ஏகப்பட்ட பிரச்சினை.. டெட்ரா பேக் மூலம் மது விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு நடப்பதாக அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு.

*  மதுபான விற்பனையை பெருக்குவதற்கான சலுகைகளை விளம்பரம் செய்யக்கூடாது- ஏற்கனவே செய்த விளம்பரங்களை நீக்கவும் புதுச்சேரி அரசு உத்தரவு..

*மொழி என்பது தமிழர்களுக்கு எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது- வட அமெரிக்கா தமிழ் சங்க மாநாட்டில் காணொலி மூலம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.

*கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது ஒரு போதும் நடக்காது- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்….

* காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா- மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாடு.

*எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டி வேலை வாங்கி தருவதாக மோசடி-59 லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண்ணை சென்னையில் கைது செய்து விசாரணை.

* சங்ககிரி அருகே எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவரின் குடி நீர் பாட்டிலில் விசம் கலப்பு- அதே வகுப்பு மாணவர்கள் இருவர் மீது போலீஸ் வழக்கு.

*கன்னியா குமரி போலிசர் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்கு- அவதூறு வீடியோ வெளியிட்டதாக புகார்.

* மணிப்பூரில் கிறித்துவ தேவலாயங்கள் தாக்கப்படுவதாக புகார்- சென்னையில் கிறித்தவ அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை வளைக்கிறது அமலாக்கத்துறை.. விசாரணைக்கு நாளை வருமாறு மூன்றாவது முறையாக சம்மன்.

*தமிழ்நாட்டின் தக்காளி விலை மேலும் உயர்வு- ஒரு கிலோ ரூ 140 வரை விற்கப்படுவதாக தகவல்.

*மாமன்னன் படம் பெரும் வெற்றி அடைந்ததில் உதயநிதி மகிழ்ச்சி..இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை பரிசளித்து பாராட்டு.

* பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞன் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மூண்ட கலவரம் ஐந்தாவது நாளாக நீடிப்பு- மேயர் வீடு மீது தாக்குதல், மேலும் 700 பேர் கைது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *